Thursday, January 23, 2020

MATRUM ENNAI UNTHAN

மாற்றும் என்னை உந்தன் சாயலாய்
ஊற்றும் உந்தன் ஆவியை என்னில்
சாற்றுவேன் உந்தன் நாமத்தை என்றும்
நேற்றும் இன்றும் மாறா இயேசுவையே

யாக்கோபை இஸ்ரவேலாய் மாற்றினவர்
சவுலைப் பவுலாய் மாற்றினீரே
எந்தன் பாவச் செயல் நினையாமல்
என்னை நேசித்த உந்தன் அன்பு

சுத்த இதயத்தை என்னில் சிருஷ்டியும்
நிலைவர ஆவியே என்னில் தந்திடும்
இரட்சண்ய சந்தோஷத்தை திரும்ப தாரும்
உற்சாக ஆவி என்னை தாங்க செய்திடும்

தண்ணீரை ரசமாக மாற்றினீரே
தாழ்ந்தவனை நீர் உயர்த்தினீரே
தற்பரா உந்தன் பொற்பாதத்தை நான்
தாழ்ந்து பணிந்து வருகின்றேன்

கல்வாரி சிலுவையின் தேவ அன்பு
கல்லான என்னுள்ளத்தை மாற்றினதே
தூரமாய் இருந்து என்னைத் தம் கரத்தால்
தூக்கி அணைத்த தேவ அன்பு

No comments: