Monday, December 2, 2019

KILAKKIRKUM MEARKIRKUM EVALAVU DHOORAM

கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரம்
அவ்வளவாய் என் பாவம் நீங்க பண்ணினாரே

திரு ரத்தம் சிந்தி முள் முடி தாங்கி
எந்தன் பாவம் நீங்க தன்னையே தந்தவரே - இயேசுவே

1. ஒண்ணு ரெண்டு தப்புகளில்லை
லட்சங்களுள் அடங்கவில்லை
ஆனால் என் நேசர் கணக்கில்
என் பெயரில் பாவம் ஒன்றில்லை

2. இவர் புகழ் சொல்லி முடிக்க
உலகத்தில் நாட்களுமில்லை
இயேசுவுக்கு நிகராக
உலகில் எந்த உறவுமில்லை
இயேசுவுக்கு நிகராய்
இவ்வுலகில் எந்த உறவுமில்லை

அல்லேலூயா ! போற்றிடுவேன்
அல்லேலூயா ! புகழ்ந்திடுவேன்
அல்லேலூயா ! உயர்த்திடுவேன்
மன்னாதி மன்னவனை !
அல்லேலூயா ! தொழுது கொள்வேன்
அல்லேலுயா ! பணிந்து கொள்வேன்
அல்லேலூயா ! ஆராதிப்பேன்
கர்த்தாதி கர்த்தரையே !

No comments: