Friday, November 22, 2019

BETHALAYIL PIRANTHAVARAI

பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே – இன்னும்


1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் – பெத்தலையில்


2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்கு
பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் – பெத்தலையில்


3.முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே – பெத்தலையில்


4.ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் – இங்கு
ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் – பெத்தலையில்


5.இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை – நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே – பெத்தலையில்

No comments: