Wednesday, November 20, 2019

EN KANMALAIYUM MEETPARUMAANA KARTHAVE

என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே
என் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும்-2

1.துணிகர பாவ கிரியை
மேற்கொள்ள முடியாது-2
வசனம் தியானிப்பதால்
வாழ்வேன் பரிசுத்தமாய்-2

இயேசைய்யா இரட்சகரே
இரத்தத்தால் கழுவினீரே-2-என் கன்மலையும்

2.(உம்) வார்த்தையின் வல்லமையால்
உயிர்ப்பிக்கப்படுகின்றேன்-2
(உம்) பாதையில் நடப்பதினால்
ஞானம் பெறுகின்றேன்-2

இயேசைய்யா இரட்சகரே
இரத்தத்தால் கழுவினீரே-2-என் கன்மலையும்

3.இதயம் மகிழ்கின்றது
(உம்) வசனம் உட்கொள்வதால்-2
கண்கள் மிளிர்கின்றன
(உம்) வார்த்தையின் வெளிச்சத்தினால்-2

இயேசைய்யா இரட்சகரே
இரத்தத்தால் கழுவினீரே-2-என் கன்மலையும்

4.தங்கம் பொன்னைவிட 
அதிகமாய் விரும்புகிறேன்-2
தேனின் சுவையை விட
சுவைத்து மகிழ்கின்றேன்-2

இயேசைய்யா இரட்சகரே
இரத்தத்தால் கழுவினீரே-2-என் கன்மலையும்

No comments: