Wednesday, November 6, 2019

EN IDAYAM YAARUKU THERIUM

என் இதயம் யாருக்குத் தெரியும் 
என் வேதனை யாருக்குப் புரியும் 
என் தனிமை, என் சோர்வுகள் யார்
என்னைத் தேற்றுவார் -4

1.நெஞ்சின் ரோகங்கள் – அதை மிஞ்சும் பாரங்கள்
தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே(2)

2.சிறகு ஒடிந்த பறவை – அது வானில் பறக்குமோ (2)
வீசும் புயலில் படகும் தப்புமோ(2)

3.மங்கி எரியும் விளக்கு
பெரும் காற்றில் நிலைக்குமோ (2) 
என் உடைந்த உள்ளமும் 
ஒன்றாய் சேருமோ (2)

4.அங்கே தெரியும் வெளிச்சம் 
கலங்கரை தீபமோ(2) 
இயேசு ராஜனின்
முகத்தின் வெளிச்சமே (2)

என் இதயம் இயேசுவுக்கு தெரியும் 
என் இதயம் இயேசுவுக்கு புரியும் 
என் தனிமை, என் சோர்வுகள் 
இயேசென்னைத் தேற்றுவார்! (2)

No comments: