Friday, February 8, 2019

SEMMARIYIN VIRUNTHUKKU LYRICS

செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்
அவ்விருந்தை உண்டிட சென்றிடுவோம் இன்பம் பொங்க - 2 

இறைவன் தரும் விருந்திது அதை உண்ணத் தடையென்ன
உறைய வரும் இறைவனை நாம் ஏற்கத் தடையென்ன - 2
உள்ளக் கதவு திறந்தது அதன் உள்ளே வாழுவாய் - 2
உவகை என்னும் ஒளி கொணர்ந்து எம்மை ஆளுவாய் 

வானம் பொழிய பூமி விளைய வளமும் பொங்குமே
வளமே வரும் ஒளியால் சோலை மலரும் எங்குமே - 2
எந்தன் உணவாய் நீ வந்தாலே இன்பம் தங்குமே - 2
உந்தன் அருளை விதைத்தால் இந்த உலகம் உய்யுமே 

உலகம் எல்லாம் இணைவது உன் உள்ளம் ஒன்றிலே
இயற்கை நிறைவு கொள்வது உன் செயலின் பண்பிலே - 2
மனித உள்ளம் மகிழ்வது உன் புனித உறவிலே - 2
மறையும் வாழ்வு மலர்வது உன் மகிழ்வின் பங்கிலே 

No comments: