Wednesday, January 30, 2019

YESU PIRANTHA NAAL ITHU LYRICS

இயேசு பிறந்த நாளிது வானம் மகிழ்ந்து ஒளிருது
காலம் கனிந்த காலையில் கடவுள் தந்த கொடையிது
மணமில்லாத மலரை போல்
இசையில்லாத பறவைப் போல் (2)
அருளில்லாத பாருலகம் அடைந்த துயரம் மாறவே – 2
துள்ளி மகிழும் குழந்தையே
உள்ளம் கொள்ளை கொண்டதே (2)
உந்தன் அன்பின் வரவிலே
விண்ணும் மண்ணும் இணைந்ததே – 2
தொழுவில் தவழும் பாசமே கடவுள் தந்த திருமொழி – 2
சிந்தை குளிரும் பூமுகமே உலகை ஒளிரச் செய்யுமே – 2

No comments: