Sunday, July 1, 2018

KARTHARE NALLAVAR THUTHIPAADALGAL LYRICS

கர்த்தரே நல்லவர்
துதிப்பாடல்கள் பாடிட செய்திட்டார்
எந்நாளுமே அவர் நல்லவர்
அந்தகாரத்திலும் அவர் ஒளி வீசும்
நல்லவர் என்றுமே
என்றும் நல்லவரே 
பள்ளத்தாக்கின் வழி நடந்து
எங்கும் இருளாய் தோன்றினால்
திகையாதே நடத்துவாரே
தீங்கு அனுகாமல் காத்திடுவார்
விலக மாட்டேன் கைவிடமாட்டேன்
என்றுரைத்தார்
இயேசு மாறிடார் 
பாவ சேற்றில் மூழ்கி கிடந்தேன்
எனக்காக ஜீவன் ஈந்தார்
அவர் அன்பை என்றும் பாடி
அவர் கிருபையை சொல்லிட
அபிஷேகம் தந்து என்னை
பெலப்படுத்தி என்னை பாட செய்தார் 
உந்தன் வழிகளை நாங்கள் என்றும்
உணராமற்போனாலும்
விசுவாச கண்களினால்
உந்தன் கரத்தினில் எந்தனின் வாழ்வை கண்டேன்

No comments: