Monday, June 18, 2018

POTHUMARAVARE PUTHUMAIANAVARE LYRICS


போதுமானவரே புதுமையானவரே
பாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரே
ஆராதனை(2) ஆயுளெல்லாம் ஆராதனை


1. எனக்காக தண்டிக்கப்பட்டடீரே
அதனால் நான் மன்னிக்கப்பட்டேன்
எனக்காக காயப்பட்டீரே
அதனால் நான் சுகம் பெற்றுக்கொண்டேன்


2. பாவங்கள் சுமந்ததனால் – நான்
நீதிமானாய் மாற்றப்பட்டேன்
மரணத்தை ஏற்றுக் கொண்டதால்-நித்திய
ஜீவனை பெற்றுக் கொண்டேன் ஐயா


3. எனக்காக புறக்கணிக்கப்பட்டீர்
அதனால் நான் ஏற்றுக்கொள்ளப்பட்டேன்
எனக்காக அவமானமடைந்து – உம்
மகிமையிலே பங்குபெறச் செய்தீர்


4. சிலுவையிலே ஏழ்மையானதால் – என்னை
செல்வந்தனாய் மாற்றிவிட்டீரே-நீர்
சாபங்களை சுமந்து கொண்டதால்-நான்
ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டேன்

No comments: