Saturday, June 2, 2018

KAVALAIGAL KANNEERGAL SOOZHNDHA LYRICS


கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்
நீர் தானே என் ஆனந்தம் – 2
கடுஞ்சொற்கள் நெஞ்சைப் பிளந்திடும் போதும்
நீர் தானே பேரின்பம் -2
கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்
நீர் தானே என் ஆனந்தம் 
1. பெற்றோரின் பாசம் உற்றோரின் நேசம்
ஒரு நாளில் பல மாற்றம் அடைவதைக் கண்டேன் – 2
மற்றென்ன சொல்வேன் மாறிடா நேசம்
மாசற்ற இயேசுவே உம் அன்பில் கண்டேன் – 2
கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்
நீர் தானே என் ஆனந்தம் 
2. உமக்காக வாழ்ந்து உமக்காக மறிக்கும்
ஒரு வாழ்க்கை நான் விரும்பி உம்மிடம் கேட்டேன் – 2
உலகத்தின் கரங்கள் அதைத் தாக்கும்போது
உன்னதா உம் கரத்தால் எனைத் தூக்கக் கண்டேன் – 2
கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்
நீர் தானே என் ஆனந்தம் 
3. அழுகையின் பள்ளத் தாக்கினைக் கடந்து
அருமையாய் நீரூற்றை என் வாழ்வில் கண்டேன் – 2
கண்ணீரால் நானும் விதைதிடும் விதைகள்
கெம்பீர அறுவடையாய் உம் கரத்தில் பெறுவேன் – 2
கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்
நீர் தானே என் ஆனந்தம் – 3

No comments: