Tuesday, May 29, 2018

DEVANIN AALAYAM THUTHIGALIN LYRICS

தேவனின் ஆலயம் துதிகளின் ஆலயம்
பரமனின் ஆலயம் பரிசுத்த ஆலயம்
மகிமையின் ஆலயம் மகத்துவ ஆலயம்
நன்றியின் ஆலயம் நாமே அவ்வாலயம்
1. கண்கள் காண்பது செவ்வையான பார்வையா
எண்ணம் கொண்டது நன்மையான எண்ணமா
கைகள் செய்வது சுத்தமான செயலா
கால்கள் போவது சரியான இடத்திற்கா
நாவு பேசுவது சமாதான வார்த்தையா
சிந்தித்து செயல்படு உன்னை மாற்றிக் கொள்வாயா
2. தேவன் கொடுத்ததை அவருக்கே கொடுத்திடு
ஜீவனுள்ள பலியாய் அவருக்கு அளித்திடு
பரிசுத்த பரிசாய் பரனுக்கு படைத்திடு
குற்றமற்ற கனியாய் கிறிஸ்துவுக்கு காண்பித்திடு
சுயத்தை வெறுத்து சிலுவையை சுமந்திடு
சரீரமென்பதை ஆலயமாக்கிடு

No comments: