Wednesday, April 18, 2018

MANAM IRANGUM DEIVAM YESU LYRICS


மனமிரங்கும் தெய்வம் இயேசு
சுகம் தந்து நடத்திச் செல்வார்
யேகோவா ரஃப்பா..இன்றும் வாழ்கின்றார்
சுகம் தரும் தெய்வம் இயேசு
சுகம் இன்று தருகிறார்


1. பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் -மாமி
கரத்தைபிடித்துதூக்கினார்
காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று
கர்த்தர் தொண்டுசெய்து மகிழ்ந்தாள்


2. குஷ்டரோகியை கண்டார்-இயேசு
கரங்கள் நீட்டித் தொட்டார்
சித்தமுண்டு சுத்தமாகு -என்று
சொல்லி சுகத்தைத் தந்தார்


3. நிமிர முடியாத கூனி -அன்று
இயேசு அவளைக் கண்டார்
கைகள் அவள்மேலே வைத்தார்-உடன்
நிமிர்ந்து துதிக்கச் செய்தார்


4. பிறவிக்குருடன் பர்திமேயு அன்று
இயேசுவே இரங்கும் என்றான்
பார்வையடைந்து மகிழ்ந்தான்-உடன்
இயேசு பின்னே நடந்தான்

No comments: