Tuesday, April 17, 2018

KARTHARAI THUTHIYUNGAL AVAR YENDRUM NALLAVAR LYRICS


கர்த்தரை துதியுங்கள்
அவர் என்றும் நல்லவர்
அவர் பேரன்பு என்றுமுள்ளது
1. ஒருவராய் மாபெரும்
அதிசயங்கள் செய்தாரே
வானங்களை ஞானமாய்
உண்டாக்கி மகிழ்ந்தாரே
இன்று போற்றி புகழுவோம்
நாம் உயர்த்தி மகிழுவோம் – 2
2. பகலை ஆள்வதற்கு
கதிரவனை உண்டாக்கினார்
இரவை ஆள்வதற்கு
சந்திரனை உண்டாக்கினார்
3. செங்கடலை இரண்டாக
பிரித்து நடக்கச் செய்தார்
வனாந்திர பாதையிலே
ஜனங்களை நடத்திச் சென்றார்
4. தாழ்மையில் இருந்த
நம்மையெல்லாம் நினைவுகூர்;ந்தார்
எதிரியின் கையினின்று
விடுவித்துக் காத்துக் கொண்டார்

No comments: