Saturday, January 2, 2016

Aadharam Neer Thaan Aiya kaalangal

ஆதாரம் நீர் தான் ஐயா
காலங்கள் மாற, கவலைகள் தீற
காரணம் நீர் தான் ஐயா

சரணங்கள்

1. உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்
கண்டேன் நான் இந்நாள் வரை
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
குழப்பங்கள் நிறைகின்றன, என் நிலை மாற --- ஆதாரம்

2. குடும்பத்தில் குழப்பங்கள் இல்லை
பணக்கஷ்டம் ஒன்றுமே இல்லை
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
அமைதி தான் கலைகின்றது, என் நிலை மாற --- ஆதாரம்

3. உந்தனின் சாட்சியாய் வாழ
உள்ளத்தில் வெகு நாளாய் ஆசை
உம்மிடம் வந்தேன் உள்ளத்தை தந்தேன்
சாட்சியாய் வாழ்ந்திடுவேன், என் நிலை மாற --- ஆதாரம்

No comments: