Monday, October 12, 2015

UMMALE THAN EN YESUVE

1.உம்மாலே தான், என் இயேசுவே,
ரட்சிக்கப்படுவேன்;
உம்மாலேதான் பேரின்பத்தை
அடைந்து பூரிப்பேன்.

2.இப்பந்தியில் நீர் ஈவது
பரம அமிர்தம்;
இனி நான் பெற்றுக்கொள்வது
அநந்த பாக்கியம்.

3.இவ்வேழை அடியேனுக்கு
சந்தோஷத்தைத் தந்தீர்;
இக்கட்டு வரும்பொழுது,
நீர் என்னைத் தேற்றுவீர்.

4.பூமியில் தங்கும் அளவும்
உம்மையே பற்றுவேன்;
எவ்வேளையும் எவ்விடமும்
நான் உம்மைப் போற்றுவேன்.

No comments: