ஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா
பல்லவி
ஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா
ஆமென், அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்!
அனந்த தோத்திரா
அனுபல்லவி
ஓம் அனாதி தந்தார், வந்தார், இறந்
துயிர்த்தெழுந்தாரே, உன்னதமே
சரணங்கள்
1. வெற்றிகொண் டார்ப்பரித்து - கொடும்வே
தாளத்தைச் சங்கரித்து, - முறித்து
பத்ராசனக் கிறிஸ்து - மரித்து
பாடுபட்டுத்தரித்து, முடித்தார்
2. சாவின் கூர் ஒடிந்து, - மடிந்து,
தடுப்புச் சுவர் இடிந்து, - விழுந்து,
ஜீவனே விடிந்து, - தேவாலயத்
திரை ரண்டாய்க் கிழந்து ஒழிந்தது
3. வேதம் நிறைவேற்றி, - மெய் தோற்றி,
மீட்டுக் கரையேற்றி, - பொய் மாற்றி,
பாவிகளைத் தேற்றி, - கொண்டாற்றி,
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்
சொல்லுகிறோம் நாதா
No comments:
Post a Comment