Sunday, June 7, 2015

AMEN ALLELUJAH MAGATHUVA THAMBARABARA LYRICS

ஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா

 பல்லவி
ஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா
ஆமென், அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்!
அனந்த தோத்திரா

அனுபல்லவி
ஓம் அனாதி தந்தார், வந்தார், இறந்
துயிர்த்தெழுந்தாரே, உன்னதமே

சரணங்கள்
1. வெற்றிகொண் டார்ப்பரித்து - கொடும்வே
தாளத்தைச் சங்கரித்து, - முறித்து
பத்ராசனக் கிறிஸ்து - மரித்து
பாடுபட்டுத்தரித்து, முடித்தார்

2. சாவின் கூர் ஒடிந்து, - மடிந்து,
தடுப்புச் சுவர் இடிந்து, - விழுந்து,
ஜீவனே விடிந்து, - தேவாலயத்
திரை ரண்டாய்க் கிழந்து ஒழிந்தது

3. வேதம் நிறைவேற்றி, - மெய் தோற்றி,
மீட்டுக் கரையேற்றி, - பொய் மாற்றி,
பாவிகளைத் தேற்றி, - கொண்டாற்றி,
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்
சொல்லுகிறோம் நாதா

No comments: