Tuesday, September 8, 2015

UNDRAN SUYAMATHIYE NERI ENDRU

உன்றன் சுயமதியே நெறி என்று
உகந்து சாயாதே - அதில் நீ
மகிழ்ந்து மாயாதே

சரணங்கள்

1. மைந்தனே, தேவ மறைப்படி யானும்
வழுத்தும்மதித னைக் கேளாய் - தீங்
கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய் --- உன்றன்

2. சொந்தம் உனதுளம் என்றுநீ பார்க்கிலோ,
வந்து விளையுமே கேடு - அதின்
தந்திரப் போக்கை விட்டோடு கதிதேடு --- உன்றன்

3. துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்
திட்ட மதாய் நடவாதே - தீயர்
கெட்ட வழியில் நில்லாதே அது தீதே --- உன்றன்

4. சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு
மிக்க இருக்க நண்ணாதே அவர்
ஐக்யம் நலம் என்றெண்ணாதே அதொண்ணாதே --- உன்றன்

5. நான் எனும் எண்ணமதால் பிறரை அவ
மானிப்பது வெகு பாவம் - அதின்
மேல்நிற்குமே தேவ கோபம் மனஸ்தாபம் --- உன்றன்

No comments: