உன்றன் சுயமதியே நெறி என்று
உகந்து சாயாதே - அதில் நீ
மகிழ்ந்து மாயாதே
உகந்து சாயாதே - அதில் நீ
மகிழ்ந்து மாயாதே
சரணங்கள்
1. மைந்தனே, தேவ மறைப்படி யானும்வழுத்தும்மதித னைக் கேளாய் - தீங்
கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய் --- உன்றன்
2. சொந்தம் உனதுளம் என்றுநீ பார்க்கிலோ,
வந்து விளையுமே கேடு - அதின்
தந்திரப் போக்கை விட்டோடு கதிதேடு --- உன்றன்
3. துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்
திட்ட மதாய் நடவாதே - தீயர்
கெட்ட வழியில் நில்லாதே அது தீதே --- உன்றன்
4. சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு
மிக்க இருக்க நண்ணாதே அவர்
ஐக்யம் நலம் என்றெண்ணாதே அதொண்ணாதே --- உன்றன்
5. நான் எனும் எண்ணமதால் பிறரை அவ
மானிப்பது வெகு பாவம் - அதின்
மேல்நிற்குமே தேவ கோபம் மனஸ்தாபம் --- உன்றன்
No comments:
Post a Comment