Wednesday, September 2, 2015

KARTHAVE YUGAYUGAMAI EM THUNAI AAYINEER

1. கர்த்தாவே, யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்;
நீர் இன்னும் வரும் காலமாய்
எம் நம்பிக்கை ஆவீர்.

2. உம் ஆசனத்தின் நிழலே
பக்தர் அடைக்கலம்;
உம் வன்மையுள்ள புயமே
நிச்சய கேடகம்.

3. பூலோகம் உருவாகியே,
மலைகள் தோன்றுமுன்,
சுயம்புவாய் என்றும் நீரே
மாறா பராபரன்.

4. ஆயிரம் ஆண்டு உமக்கு
ஓர் நாளைப் போலாமே;
யுகங்கள் தேவரீருக்கு
ஓர் இமைக்கொப்பாமே

5. சாவுக்குள்ளான மானிடர்
நிலைக்கவே மாட்டார்;
உலர்ந்த பூவைப்போல் அவர்
உதிர்ந்து போகிறார்.

6. கர்த்தாவே, யுக யுகமாய்
எம் துணை ஆயினீர்;
இக்காட்டில் நற் சகாயராய்
எம் நித்திய வீடாவீர்.

No comments: