Wednesday, August 26, 2015

THOOIMAI PERA NAADU KARTHAR PATHAME

1. தூய்மை பெற நாடு; கர்த்தர் பாதமே
நிலைத்தவர் வார்த்தை உட்கொள்ளென்றுமே;
கூடி பக்தரோடு சோர்ந்தோர் தாங்குவாய்,
யாவிலுமே தெய்வ தயை நாடுவாய்.

2. தூய்மை பெற நாடு; லோகத்தில் கோஷ்டத்தில்
தனித்திரு நாளும் அவர் பாதத்தில்
யேசுவைப் போலாவாய், நோக்கின் அவரை
பார்ப்போர் உன்னில் காண்பார் அவர் சாயலை.

3. தூய்மை பெற நாடு; கர்த்தர் நடத்த,
என்ன நேரிட்டாலும், அவர்பின் செல்ல;
இன்பம் துன்பம் நேர்ந்தும் விடாய் அவரை,
நோக்கியவர் வாக்கில் வைப்பாய் நம்பிக்கை.

4. தூய்மை பெற நாடு; ஆத்மா அமர்ந்து,
சிந்தை செய்கை யாவும் அவர்க்குட்பட்டு,
அன்பின் ஜீவ ஊற்றைச் சேர்ந்து ருசிக்க,
முற்றும் தூய்மையாவாய் விண்ணில் வசிக்க.

No comments: