Saturday, July 25, 2015

THAYIN MADITHAAN ULAGAM LYRICS

தாயின் மடிதான் உலகம் அவள் தாளைப் பணிந்திடுவோம் - 2
அவள் சேயின் மடிதான் மோட்சம்
நம் சேசுவைத் தொழுதிடுவோம் - 2

பிள்ளை என்றும் வாழ நல்லது எல்லாம் தருவாள் - 2
அவள் உள்ளம் என்றும் மகிழ
உண்மை வழியில் நாம் நடப்போம்

அன்னை மரியாள் உள்ளம் ஆழம் காணாக் கடலாம் - 2
அன்பு கருணை உருவாய்
ஆண்டவன் தந்த அரும்பொருளாம்

வங்கக் கடற்கரை யோரம் வேளாங்கண்ணியில் வாழும் - 2
தங்க நிலாவின் ஒளியால்
தாரகை சூடும் ஆரோக்கியமாதா

No comments: