சாலேமின் ராசா, சங்கையின் ராசா | |
1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி, வாருமேன், - இந்தத் தாரணி மீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன் 2. சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே - இந்தச் சீர் மிகும் மாந்தர்கள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ? 3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்துபார்த்துக் கண்பூத்துப் போகுதேளூ - நீர் சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே. 4. நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதேளூ - இந்த நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே. 5. சாட்சியாகச் சுபவிசேஷம் தாரணிமேவுதேளூ - உந்தஞ் சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக்கூவுதே. |
No comments:
Post a Comment