Sunday, June 14, 2015

SAALEMIN RAASA, SANGAIYIN RAASA

சாலேமின் ராசா, சங்கையின் ராசா
  1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி, வாருமேன், - இந்தத்
தாரணி மீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன்

2. சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே - இந்தச்
சீர் மிகும் மாந்தர்கள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ?

3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்துபார்த்துக் கண்பூத்துப் போகுதேளூ - நீர்
சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே.

4. நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதேளூ - இந்த
நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே.

5. சாட்சியாகச் சுபவிசேஷம் தாரணிமேவுதேளூ - உந்தஞ்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக்கூவுதே.

No comments: