Monday, June 29, 2015

ADHISAYAMAANA OOLIMAYA NAADAAM

அதிசயமான ஒளிமய நாடாம்
நேசரின் நாடாம் - நான்
வாஞ்சிக்கும் நாடாம் -என்

சரணங்கள்

1. பாவம் இல்லாத நாடு
ஒரு சாபமும் காணா நாடு
நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்
உன்னதத்தில் ஓசன்னா அல்லேலூயா --- அதிசயமான

2. சந்திர சூரியன் இல்லை
ஆனால் இருள் ஏதும் காணவில்லை
தேவ குமாரன் ஜோதியில் ஜோதி
நித்திய வெளிச்சமாவார் - என்றும் பகல் --- அதிசயமான

3. விதவிதக் கொள்கை இல்லை
பலப் பிரிவுள்ள பலகை இல்லை
ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்
எங்குமே அன்பு மயம் - அன்புள்ளோர் செல்லும் --- அதிசயமான

4. பிரச்சனை ஏதும் இல்லை
வீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லை
மொழி , நிறம் , ஜாதி பற்று உடையோர்
எவருமே அங்கு இல்லை --- அதிசயமான

5. கடைத்தெரு ஏதும் இல்லை
தொழிற்சாலைகள் ஒன்றும் இல்லை
தரித்திரர் , செல்வர் ,சிறியவர் , பெரியோர்
ஆகிய சிறப்பும் இல்லை - எல்லாம் சமம் --- அதிசயமான

6. பல பலத் திட்டம் இல்லை - ஆளும்
சட்டங்கள் ஏதுமில்லை
காவல் துறையில்லை , கண்டிப்பும் இல்லை
மனிதனின் ஆட்சி இல்லை - பேரானந்தம் --- அதிசயமான

7. இயேசுவின் இரத்தத்தினால் - பாவம்
கழுவினால் செல்லலாமே
இத்தனை பெரிய சிலாக்கியம் இழப்போர்
பூமியில் எவரும் வேண்டாம் - இன்றே வாரீர் --- அதிசயமான

No comments: