Friday, December 18, 2015

Unakkulle irukkindra un yesu

உனக்குள்ளே இருக்கின்ற - உன்
இயேசு என்றும் பெரியவரே நீ
அறியாததும் உனக்கு எட்டாததுமான
பெரிய காரியம் செய்திடுவார்

நம்பிக்கை இல்லா நிலையானதோ
விசுவாசம் உன்னில் குறைவானதோ
அற்புதர் உனக்குள்ளே இருக்கின்றார்
அதிசயம் செய்வார் கலங்காதே

சூழ்நிலை எல்லாம் எதிரானதோ
சுற்றத்தார் உன்னில் பகையானரோ
வல்லவர் உனக்குள்ளே இருக்கின்றார்
வலக்கரம் தாங்குவார் கலங்காதே

மதுரமான வாழ்வு கசப்பானதோ
ஒளிவரும் நேரம் இருளானதோ
ஜீவனுள்ள தேவன் இருக்கின்றார்
யாவையும் செய்வார் கலங்காதே

Aayiram sthothirame yesuve

ஆயிரம் ஸ்தோத்திரமே இயேசுவே பாத்திரரே
பள்ளத்தாக்கிலே அவர் லீலி
சாரோனிலே ஓர் ரோஜா

வாலிப நாட்களிலே என்னைப்
படைத்தவரை நினைத்தேன்
ஏற்றிய தீபத்தால் இதயமே நிறைந்தது
இயேசுவின் அன்பினாலே

உலக மேன்மை யாவும்
நஷ்டமாய் எண்ணிடுவேன்
சிலுவை சுமப்பதே லாபமாய் நினைத்தே
சாத்தானை முறியடிப்பேன்

சிற்றின்ப கவர்ச்சிகளை வெறுக்கும்
ஓர் இதயம் தந்தீர் துன்பத்தின்
மிகுதியால் தோல்விகள் வந்தாலும்
ஆவியில் மகிழ்ந்திடுவேன்

பலவித சோதனையே சந்தோஷமாய்
நினைப்பேன் எண்ணங்கள்
சிறையாக்கி இயேசுவுக்கு கீழ்படுத்தி
விசுவாசத்தில் வளர்வேன்

இயேசுவின் நாமத்திலே ஜெயம்
கொடுக்கும் தேவனுக்கு அல்லேலூயா
ஸ்தோத்திரம் இயேசுவே வாரும்
என்றென்றும் உம்மில் வாழ

Nesikkum nesar yesu unnai

நேசிக்கும் நேசர் இயேசு உன்னை
காத்து நடத்திடுவார்
கலங்காதே திகையாதே
கர்த்தர் இயேசு உண்டு

உன்னதங்களிலே வாசம் செய்யும்
உன்னதமான தேவன் உண்டு
உந்தன் கவலையை அவரிடம் சொன்னால்
உடனே பதிலளிப்பார்-உனக்கு

பாரினில் உழலும் பாவியாம் உனக்கு
பரிந்து பேசும் இயேசு உண்டு
பரன் பாதம் தேடியே வந்தால்
பரிவாய் பதிலளிப்பார்

அன்பாக உன்னை நன்றாக நடத்தும்
இன்ப தேவ ஆவி உண்டு
துன்ப சுமைதனை அவர் பாதம் வைத்தால்
கனிவாய் பதிலளிப்பார்

வானமும் பூமியும் நிலைமாறினாலும்
என்றும் மாறா வார்த்தை உண்டு
அதிகாலையில் அவர் முகம் கண்டால்
அன்பாய் பதிலளிப்பார்

Kartharai thuthiththu avarin

கர்த்தரைத் துதித்து அவரின் நாமத்தை
பிரஸ்தாபமாக்குங்கள்
அவரின் செய்கைகளை என்றும்
பிரசித்தப்படுத்திடுங்கள்

அல்லேலூயா பாடிடுவேன்
அல்லேலூயா ஆர்ப்பரிப்பேன்

கர்த்தரே பெரியவர் அவர்
ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர்
ஜனங்களுக்குள்ளே மகிமையைப் பாடி
விவரித்துச் சொல்லுங்களேன்

கர்த்தரே வல்லவர்
செங்கடல்தனை பிளந்தவர் - அவர்
சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்
'வல்லமை மிகுந்தவர்

கர்த்தர் நல்லவர்
நன்மையானதைச் செய்பவர்
அல்லேலூயா பாடி ஆனந்தமாய் கூடி
மகிமை செலுத்துவோம்

Inba yesuvin inaiyilla

இன்ப இயேசுவின் இணையில்லா
நாமத்தை புகழ்ந்து
இகமதில் பாடிட தருணமிதே
இயேசுவைப் போல் ஒரு நேசரில்லை
இன்றும் என்றென்றும் அவர்
துதி சாற்றிடுவேன்

நித்தியமான பர்வதமே
உந்தனில் நிலைத்திருப்பேன்
நீக்கிடாதென்னை தோளின் மேல் சுமந்தே
நித்தம் நடத்திகிறீர் - என்னையும்
உம் ஜனமாய் நினைத்தே ஈந்தீர்
உன்னத வெளிப்படுத்தல் நிறைவாய்

பாவத்தில் வீழ்ந்து மாயையிலே
ஆழ்ந்து நான் மாள்கையிலே
பிரிந்து தேவ அன்பினைக் காட்டியே
பட்சமாய் பிரிந்தெடுத்தீர்
பாரில் பரிசுத்தராகுதற்காய் - மிக
பரலோக நன்மைகளால் நிறைந்தீர்

மானானது நீரோடைகளை
வாஞ்சித்துக் கதறுமாப் போல் - என்
ஆத்துமா உம்பொன் முகம் காணவே
வாஞ்சித்து கதறிடுதே
வானிலும் இந்தப் பூமிலும் நீர் - என்
வாஞ்சைகள் தீர்ப்பவராய் நினைத்தே

ஆர்ப்பரிப்போடே ஸ்தோத்திரிப்போம்
அன்பரை உளம் கனிந்தே
அற்புத ஜெயம் ஈந்தீரே
அளவில்லாத ஜீவனை அளித்தே
அல்லேலூயா துதி கன மகிமை - உம்
நாமத்திற்கே நிதம் சாற்றிடுவோம்

Nallavare yesu deva

நல்லவரே இயேசு தேவா
நன்மையினால் முடிசூட்டி
கிருபைகளை பொழிந்திவீர்
என்றென்றுமாய் நடத்திடுவீர்

உம்முடைய பரிசுத்தமாம்
வீட்டின் நன்மையால்
திருப்தியாக்கியே நிதம் நடத்தினீரே
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்

தடுமாறும் வேளையிலும் சித்தம் செய்திட
பாதை காட்டினீரே என்றும் ஸ்தோத்திரம்
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்

இதுவரையும் நடத்தி வந்த உமது நன்மையை
என்றும் மறவேனே நன்றி இயேசுவே
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்.

En nambikaiyae umakku

என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
என் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரம்
உம்மைத்தான் நான் நம்பியிருக்கிறேன்
அற்புதங்கள் எனக்கு செய்யுங்கப்பா

நூற்றுக்கு நூறு உம்மை நம்புவேன்
அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
மனிதர்கள் முன்பாக தலைகுனிந்து போகாமல்
உதவி செய்திடுங்க உயர்த்தி வெச்சிடுங்க

ஆராய்ந்து முடியாத அதிசங்கள் செய்பவரே
அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
இரட்டிப்பான நன்மைகளை தருவேன்னு
சொன்னீரே இன்றைக்கே
தந்திடுங்க இப்பவே தந்திடுங்க

உம்மையல்லாமல் யார் என்னை
உயர்த்தக் கூடும் அற்புதம்
செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
ஐசுவரியம் கனமுமே உம்மாலே தான்
வருகிறது ஆளுகை செய்யுங்கப்பா
மேன்மை படுத்துங்கப்பா