Sunday, April 13, 2025

Yesuvin Kudumpam Onru Undu இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

 இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

அன்பு நிறைந்திடும் இடம் உண்டு

உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை
ஏழையில்லை பணக்காரன் இல்லை
ராஜாதி ராஜா இயேசு
என்றென்றும் ஆண்டிடுவார்

பாவமில்லை அங்கு சாபமில்லை
வியாதியில்லை கடும் பசியுமில்லை
ராஜாதி ராஜா இயேசு
என்றென்றும் காத்திடுவார்

இன்பமுண்டு சமதானமுண்டு
வெற்றியுண்டு துதிப் பாடலுண்டு
ராஜாதி ராஜா இயேசு
என்றென்றும் ஈந்திடுவார்

Yesuvin Naamathai sthotharippen இயேசுவின் நாமத்தை ஸ்தோத்தரிப்பேன்

 இயேசுவின் நாமத்தை ஸ்தோத்தரிப்பேன்

ஸ்தோத்தரிப்பேன்
என்ன வந்தாலும் அஞ்சிடேன் நான்
ஸ்தோத்தரிப்பேன்

தேவன் பாதம் அமர்ந்து அவர் வார்த்தைகள் கேட்பேன்
தினமும் அவரின் முகத்தின் தரிசனம் பெறுவேன்
இயேசு ராஜனே என் இதய கீதமே
நேசரின் அன்பை எந்நாளும் பாடுவேன்

தேவா உந்தன் கிருபை அது எனக்கும் போதுமே
என்னை வழிநடத்தும் உமது கரமே
உமது கண்களில் நான் இரக்கம் பெற்றேனே
என் ஆயுள் முழுவதும் சங்கீதம் பாடுவேன்

மனமோ தளராது தேவமகிமையைப் புகழ்வேன்
சந்தோஷம் மகிழ்ச்சி அதனால் அடைவேன்
இயேசு தேவனே என்னில் உயிர் வாழ்கிறார்
அவர் பிரசன்னத்தால் நானும் பிரகாசிப்பேன்

Yesuvukku Sonthamaana இயேசுவுக்கு சொந்தமான பிள்ளைகள்

 இயேசுவுக்கு சொந்தமான பிள்ளைகள் – அவர்

அன்புக்கு அடிபணிந்த சீடர்கள்
தேவகரம் வடிவமைத்த ஜீவ சிற்பங்கள் – அவர்
ஆற்றலுக்கு வலுவான உயிர்ச்சான்றுகள்

இசாவா நாங்கள் இசாவா
இயேசுவைச் சேர்ந்தவர்கள் இசாவா – நாங்கள்

இயேசுவைப் பற்றிக்கொண்ட புத்திசாலிகள்
உன்னதத்தில் கொலுவிருக்கும் விந்தை மாந்தர்கள்
நிலைவாழ்வும் நிறைவாழ்வும் கண்ட ஞானிகள்
சாத்தானைத் தோற்கடிக்கும் வெற்றி வீரர்கள்

பாவ மாந்தர் மீட்பைக் காணும் அடையாளங்கள்
தேவ செய்தி சுமந்தலையும் இராஜ மடல்கள்
தூய்மை மணம் வீசுகின்ற நற்கந்தங்கள்
வாழ்வை பானபலியாக்கும் உயிர்த்தோழர்கள் – நாங்கள்

தேவ அரசு விடிய உழைக்கும் போராளிகள்
தேசத்தைக் கலக்குகின்ற சாவின் எதிரிகள்
இராஜநெறி பரப்புகின்ற புரட்சியாளர்கள்
தேவனுக்காய் வாழ்ந்து முடிக்கும் நித்யசாட்சிகள்

Yudha Raajasingam uyirthelundhar யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்

 யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்

உயிர்த்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார்

வேதாளக் கணங்கள் ஓடிடவே
ஓடிடவே, உருகி வாடிடவே

வானத்தின் சேனைகள் துதித்திடவே
துதித்திடவே, பரனைத் துதித்திடவே

மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன
தெறிபட்டன, நொடியில் முறிபட்டன

எழுந்தார் என்றதொனி எங்குங் கேட்குதே
எங்குங் கேட்குதே, பயத்தை என்றும் நீக்குதே

மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார்
அகமகிழ்ந்தார், பரனை அவர் புகழ்ந்தார்

உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
மரிப்பதில்லை, இனி மரிப்பதில்லை

கிறிஸ்தோரே நாமவர் பாதம் பணிவோம்
பாதம் பணிவோம், பதத்தைச் சிரமணிவோம்

Yuthathil Vallavar Senaiyin யுத்தத்தில் வல்லவர் சேனையின்

 யுத்தத்தில் வல்லவர் சேனையின் கர்த்தர்

வல்லமையுடையவரே
துதிகளில் எல்லாம் பயப்படத்தக்கவர்
பரிசுத்தர் பரிசுத்தரே

ஜாதிகள் உம்மைச் சேவிப்பார்கள்
ஜனங்கள் உம்மிடம் வருவார்கள்
மாமிசமான யாவரின் மேலும்
ஆவியை ஊற்றும் இரட்சகரே

அற்புத தேவன் அதிசய ராஜன்
மகத்துவமுடையவர் இயேசுவே
மகிமைகள் சூழும் அவர் சமூகத்தில்
மகிழ்ந்திருப்போம் நாம் ஜெயத் தொனியாய்

சத்துரு வெள்ளம் போல் வந்தாலும்
கர்த்தரின் ஆவியே கொடியேற்றுவார்
அக்கினி ரதங்கள் அக்கினி குதிரைகள்
தூதர்கள் காற்றாய் நமக்குண்டு

Saturday, April 12, 2025

khristo sabu re sabu atanti more ଖ୍ରୀଷ୍ଟ ସବୁରେ ସବୁ ଅଟନ୍ତି ମୋର


ଖ୍ରୀଷ୍ଟ ସବୁରେ ସବୁ ଅଟନ୍ତି ମୋର 

ତେବେ କି ଅଭାବ ମୋର କି ଚିନ୍ତା ଆର ! । ଘୋଷା । 

 

ଶତ୍ରୁଗଣ ଦମନାର୍ଥେ ସେହି ବଳ ମୋହର,

ଅନ୍ଧାରେ ଅଟନ୍ତି ସେହି ମୋର ମିହିର । ୧ ।

ଦୁର୍ବଳତାରେ ମୋହର ଅଟନ୍ତି ସର୍ବ ବଳ,

ଅଭାବରେ ସେହି ମୋର ସର୍ବ ନିର୍ଝର । ୨ । 

 

ପରିଶ୍ରମେ ମୋ ବିଶ୍ରାମ ରୋଗରେ ଉପଶମ,

କ୍ଷତିରେ ଲାଭ ମୋର କ୍ଳେଶରେ ମଙ୍ଗଳ । ୩ ।

ପରୀକ୍ଷାରେ ମୋ ଆଶ୍ରୟନିର୍ଦ୍ଧନେ ଧନ ମୋର,

କରନ୍ତି ସଦା ଦୁର୍ବଳତା ପ୍ରତିକାର । ୪ । 

 

ଲଜ୍ଜାରେ ଗୌରବ-ମୁକୁଟ ଅଟନ୍ତି ମୋହର,

ବନ୍ଧନେ ଅଟନ୍ତି ସେହି ମୁକ୍ତି ଆବର । ୫ ।

କ୍ଷୁଧାରେ ମୋର ଆହାରତୃଷାରେ ସେହି ନୀର,

ସେହି ଅଟନ୍ତି ମୋର ଅମୃତ ନିର୍ଝର । ୬ ।

ମୃତ୍ୟୁରେ ମୋର ଜୀବନସେହି ମୋ ସର୍ବ ଧନ,

ସମସ୍ତରେ ଅଟନ୍ତି ସେ ସବୁ ମୋହର । ୭ ।

ସୂଚୀମାଳାକୁ ଫେରନ୍ତୁ

Thursday, April 10, 2025

khriste deho praano samarpino kaatibi ଖ୍ରୀଷ୍ଟେ ଦେହ ପ୍ରାଣ ସମର୍ପିଣ କାଟିବି ମୁଁ ଦିନ

 


ଖ୍ରୀଷ୍ଟେ ଦେହ ପ୍ରାଣ ସମର୍ପିଣ କାଟିବି ମୁଁ ଦିନ । ଘୋଷା 

କରିବାକୁ ମୁଁ ଏସନ  ସେ କରି ସ୍ୱ ରକ୍ତ ଦାନ

ତଦ୍ଦ୍ୱାରା କିଣି ଅଛନ୍ତି ମୋହର ଏ ଦେହ ପ୍ରାଣ         ା ୧ । 

 

ଏଣୁ ଖ୍ରୀଷ୍ଟେ ଦେହ ପ୍ରାଣ          ସମର୍ପିଣ ପ୍ରତିଦିନ

ଲୋଡ଼ିବି ତାଙ୍କ ସମ୍ଭ୍ରମ ହୋଇ ଅତି ଯତ୍ନବାନ          ା ୨ । 

 

ଖ୍ରୀଷ୍ଟେ ଦେଲେ ଦେହ ପ୍ରାଣ       ପାପ କ୍ଷିତି ଶୟତାନ 

କେହି ମୋର କ୍ଷତି କରି ନ ପାରେ ଯାବଜ୍ଜୀବନ           ା ୩ । 

 

ଖ୍ରୀଷ୍ଟେ ଦେଲେ ଦେହ ପ୍ରାଣ       ଈଶ୍ୱର ହୋଇ ପ୍ରସନ୍ନ 

ସୁଦୟାରେ ସ୍ୱସନ୍ତାନ କରିନେବେ ସ୍ୱର୍ଗସ୍ଥାନ           ା ୪ ।

ଏଣୁ କରି ଆରେ ମନଖ୍ରୀଷ୍ଟେ ଦେଇ ଦେହ ପ୍ରାଣ

ଇହ ପର ସୁକଲ୍ୟାଣ ପ୍ରଚୁର ହୁଅ ପ୍ରାପଣ ା ୫ । 

 

ହେ ପ୍ରଭୁକର କଲ୍ୟାଣ           ଯେହ୍ନେ ମୁହିଁ 

ଦେହ ପ୍ରାଣ ସମର୍ପି ତବ ଚରଣ ସେବିବି ଯାବଜ୍ଜୀବନ            ା ୬ ।