Tuesday, April 15, 2025

Ummal Azhaikappadu உம்மால் அழைக்கப்பட்டு

 உம்மால் அழைக்கப்பட்டு

உம்மில் அன்பு வைக்கும்
உமது பிள்ளைகளுக்கு
எல்லாம் நன்மையாய் நடத்தி தந்திடும்
அன்பு தெய்வம் நீரே

நடந்ததோ நடப்பதோ
நடக்கவிருக்கும் காரியமோ
எதுவுமே உமதன்பை
என்னிடமிருந்து பிரிக்குமோ

முன்னறிந்தீரே முன்குறித்தீரே உமது
பிள்ளைகளை அழைத்தீரே
அழைக்கப்பட்ட எம்மை நீதிமானாக்கி
மகிமைப்படுத்தி மகிழ்ந்தீரே

எங்களுக்காக இயேசுவைகூட
மாசற்ற பலியாய் தந்துவிட்டீர்
ஏங்கி நிற்கும் உம் பிள்ளைகட்கு
மற்றவை எல்லாம் தந்தருள்வீர்

No comments: