Saturday, April 19, 2025

Paranae En Ithayathil Vaarum பரனே என் இதயத்தில் வாரும்

 பரனே என் இதயத்தில் வாரும்

பரநோக்கம் நிறைவேற்ற வாரும்
அனுதினம் என்மனம் கழுவிடும்
அழகிய புதுமனம் தந்திடும்
பரிவுடன் பாவியை கண்டிடும் – என்
சுயமதை திருசலவை செய்திடும்

அதட்டிவிடும் நெஞ்சை
அகற்றிவிடும் நஞ்சை
புகுத்திவிடும் எனக்குள் பரமசிந்தை
பரிசுத்தம் கேட்கிறேன் உம் குழந்தை
அழுகிய சிந்தனை மங்கவே
மனதினுள் வசனங்கள் தங்கவே
அகமகிழ்ந்தெனதுள்ளம் பொங்கவே
அடைக்கலம் அருளுமே துங்கவே

திருக்குள்ளவன் மிஞ்சும்
கிறுக்குள்ளவன் கெஞ்சும்
கரத்துடனே உம்மிடம் கதறுகிறேன்
கிருபை கிடைக்கத்தானே பதறுகிறேன்
புவியதன் சோதனை குறையவே
பரமனின் போதனை நிறையவே
பகலதன் பிள்ளையாய் வளரவே
உலகினில் தீபமாய் ஒளிரவே

மயக்கத்திலே மனம்
கிரக்கத்திலே குணம்
உறக்கத்திலிருந்தென்னை எழுப்பிவிடும் – கெட்ட
உணர்ச்சிகள் அனைத்தையும் கொளுத்திவிடும்
அகமதின் கபடினை தள்ளவே
ஆவியின் கனிதனை அள்ளவே
அசுரனை அனுதினம் வெல்லவே
அவனியில் கிருபையைச் சொல்லவே

Parisutharae Engal Yesu Deva பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா

 பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா

நானிலத்தில் நீர் என்றும் ராஜா -2
உம்மைப் பாடுவதால்
என்னில் தோல்வியில்லை
உம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை -2
அல்லேலூயா -4

உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையா
உம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா -2

நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயா
எனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோ -2
புழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரே
ராஜாக்களோடு அமர்த்தினீரே -2உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்
உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன் -அல்லேலூயா

ஊழிய எல்லைகள் பெரிதாக்கினீர்
அதில் இராஜாக்கள் உதிக்கவும் உதவிசெய்தீர் -2
அறியாத ஜாதியை வரவழைத்தீர்
நீர் தந்த வாக்கினை நிறைவேற்றினீர் -2
உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்
உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன் -அல்லேலூயா

வருத்தங்கள் பசிதாகம் ஏற்பட்டாலும்
எங்கள் விசுவாச கேடகம் வீழ்ந்திடாதே -2
நம்பினோர் நட்டாத்தில் கைவிட்டாலும்
என்னை காப்பற்ற நீர் உண்டு பயமில்லையே -2
உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்
உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன் -அல்லேலூயா

Pasuthol Porthiya Puliyaa Nee பசுத்தோல் போர்த்திய புலியா நீ

 பசுத்தோல் போர்த்திய புலியா நீ

பயிரை மேயும் வேலியா
வெளியில் ஒரு குணம் கோயிலில் ஒரு குணம்
இதுதான் உந்தன் வாழ்க்கையா

அனலும் இல்லாமல், குளிரும் இல்லாமல்
வாழும் வாழ்க்கையில் பயனில்லை
தேவன்மேல் அன்பும் பிறன்மேல் அன்பும்
வாழ்க்கையில் இருந்தால் பயமில்லை

குடியை தேடி புகையை ஊதி
வாழ்நாள் முழுவதும் களியாட்டம்
ஆலயத்தில் மட்டும் மகா பரிசுத்தம்
பயங்கரமான பாவ குற்றம் – இது

வாயின் வஞ்சகம் வீண் வாக்குவாதம்
மனதில் முழுவதும் மாய்மாலம்
உன்னால் கெட்டுப்போகும் தேவனது நாமம்
கிறிஸ்துவுக்குன்னால் அவமானம்

ஆவியில் நிரம்பி பாஷைகள் பேசி
ஞாயிற்றுக்கிழமையில் ஆராதனை
அடுத்த நாளே பாவத்துக்கு அடிமை
தேவனுக்குன்னால் மனவேதனை

கண்கள் திறந்தால் வெளிச்சமுண்டாகும்
இருளிலிருந்து வெளியே வா
அத்துமா ரட்சிப்பு மிகவும் அவசியம்
இதயத்தை இன்று தேவனுக்கு தா

Payangara Parakiramam Seiyum பயங்கர பராக்கிரமம் செய்யும்

 பயங்கர பராக்கிரமம்

செய்யும் தேவன் இருப்பதினால்
அஞ்சிடேன் என்றுமே
ஜெயமே நான் அடைந்திடுவேன்

அவர் மா அன்பினால் என்னை மாற்றி தினம்
அதிசயம் காட்டி இணங்கச் செய்தார்
ஜெயித்திடுவேன் வீழ்த்திடுவேன்
தேவாவி என் மீது தங்குவார்

அவர் நல்லவரே அவர் வல்லவரே
சோதித்து அறியும் கர்த்தரிவர்
தேர்ச்சி என்றும் உண்டாகும்
காரியம் அவர் மீது சாட்டினேன்

அவர் நான் நம்பிடும் எந்தன் தேவனாவார்
உதவிகள் அவரால் கிடைத்திடுமே
உண்மையினை காத்திடுவேன்
எனக்காக யாவையும்செய்குவார்

அவர் வார்த்தை என்றும் எந்தன் உள்ளத்திலே
எரிந்திடும் தீ போல் பரவிடுதே
போதனையை பெற்றிடுவேன்
என்றென்றும் அவர் வாக்கை காப்பேன்

அவர் நல்நாமத்தை என்றும் நான் பாடுவேன்
அவரது கரமே எழும்பிடுமே
விடுதலையை அளித்திடுவார்
எந்நாளும் அவர் நாமம் போற்றுவேன்

Payapadamaaten Naan Payapadamaaten பயப்படமாட்டேன் நான் பயப்படமாட்டேன்

 பயப்படமாட்டேன் நான் பயப்படமாட்டேன்

இயேசு என்னோடு இருப்பதனால்
ஏலேலோ ஐலசா ஏலேலோ ஐலசா

உதவி வருகிறார் பெலன் தருகிறார்
ஒவ்வொரு நாளும் கூட வருகிறார்

காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்
எனது நங்கூரம் இயேசு இருக்கிறார்

வலைகள் வீசுவோம் மீன்களைப் பிடிப்போம்
ஆத்துமாக்களை அறுவடை செய்வோம்

பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு

பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்
இலக்கை நோக்கி நாம் படகைஓட்டுவோம்

உலகில் இருக்கிற அலகையை விட
என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்