Wednesday, April 23, 2025

Nenjamellam Neerae Nirainthiruppir நெஞ்சமெல்லாம் நீரே நிறைந்திருப்பீர்

 நெஞ்சமெல்லாம் நீரே நிறைந்திருப்பீர் தேவா

எண்ணி மகிழ்வேனே உமது அன்பை
என்றும் மறவேனே உமது அன்பை

நீரோடை வாஞ்சிக்கும் மான்களைப் போலவே
கர்த்தரின் சமூகத்தைத் தேடிடுவேன்
காலையும் மாலையும் தேவனின் பிரசன்னம்
என்னை நிரப்பும் மகிமையே

எண்ணிலடங்காத நன்மைகள் எனக்கு
செய்தவரே உம்மைத் துதித்திடுவேன்
இராச்சாமத்திலும் விழிப்புடன் இருப்பேன்
நேசரின் வருகைக்காய் காத்திருப்பேன்

மன்னவரின் லோகம் நான் மலரடி சேர
என்னை வழிநடத்தும் உமது வேதம்
சொன்ன மொழியாவும் என்னில் நிறைவேறும்
சத்திய வார்த்தைகள் நிச்சயமே

Nesikkiren Ummaithaane Iyya நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா

நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
நிலையில்லாத இந்த உலகத்திலே
நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
உம்மைத்தானே இயேசையா

ஒவ்வொரு நாளும் எனது கண் முன்
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
வலப்பக்கத்தில் இருப்பதனால்
நான் அசைக்கப்படுவதில்லை

உம்மையல்லாமல் வேறே விருப்பம்
உள்ளத்தில் இல்லையே
நிம்மதியே நிரந்தரமே என்
நினைவெல்லாம் ஆள்பவரே

ஐயா உம் தாகம் எனது ஏக்கம்
அடிமை நான் கதறுகிறேன்
என் ஜனங்கள் அறியணுமே
இரட்சகர் உம்மைத் தேடணுமே

உமது வேதம் எனது மகிழ்ச்சி
ஓய்வின்றி தியானிக்கின்றேன்
ஆற்றங்கரை மரமாக
அயராமல் கனி கொடுப்பேன்

Netru Indru Naalai Marathavare நேற்று இன்று நாளை மாறாதவரே

 நேற்று இன்று நாளை மாறாதவரே

காலம் மாறினாலும் மாறாதவரே

வாக்குத்தத்தம் கொடுத்தால் – அதை
நிறைவேற்றிடுவார்
நம்மைப் போல அல்ல – அவர்
கண்டதையும் சொல்ல

சொல்வதெல்லாம் உண்மை – அவர்
செய்வதெல்லாம் நன்மை
பொய்கள் கிடையாது – அவர்
செய்கை புரியாது

தாழ்பாள்களை முறித்தார் – வெண்கல
கதவினை உடைத்தார்
இன்றும் அதைச் செய்வார் – உன்னை
விடுவித்து காப்பார்

பாவம் நீங்கிப்போனதே – வாழ்வில்
விடுதலை வந்ததே
செய்ததெல்லாம் அவரே – இன்றும்
அதைச் செய்வாரே

Nilaiyaana Singasanam En Yesu நிலையான சிங்காசனம் என் இயேசு

 நிலையான சிங்காசனம்

என் இயேசு எனக்குத் தந்தார்
அவர் இருக்கின்ற உயரத்திலே
என்னை அவருடன் அமரச் செய்தார்

நான் பரிசுத்தவானாய் வாழ்வதற்காய்
இயேசு பாவமானார்
நான் பெலவான் என்று அழைக்கப்பட
இயேசு எனக்காக கைவிடப்பட்டார்

நான் செல்வந்தனாக வாழ்வதற்காய்
இயேசு ஏழையானார்
நான் ஆசீர்வாதமாய் வாழ்வதற்காய்
இயேசு எனக்காக சாபமானார்

நான் ஆரோக்கியமாக வாழ்வதற்காய்
இயேசு நொறுக்கப்பட்டார்
நான் பரலோக பாக்கியம் பெறுவதற்காய்
இயேசு எனக்காக உயிரைத் தந்தார்

Niraivaana Belanai Naan நிறைவான பலனை நான்

 நிறைவான பலனை நான் வாஞ்சிக்கிறேன்

குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே
நிறைவான தேவன் நீர் வருகையிலே

வாழ்க்கையில் குழப்பங்கள் குறைவுகள் வந்தாலும்
அழைத்தவர் நீர் இருக்க பயமே இல்ல
வாக்கு செய்தவர் மாறாதவர்
உம்மையே நம்பிடுவேன்

குறைவுகள் எல்லாம் நிறைவாகும்
நிறைவான தேவன் நீர் வருகையிலே

தாயை போல என்னை தேற்றுகிறீர்
ஒரு தந்தை போல என்னை சுமக்கின்றீர்
உங்க அன்பு பெரிதய்யா
உம்மை நம்பிடுவேன்

Oli Tharum Theebangal ஒளி தரும் தீபங்கள்

 ஒளி தரும் தீபங்கள்

சுடர் வீசும் தீபம் நாம்
கலங்கரை விளக்கைப் போல்
இயேசுவில் ஒளி பெறுவோம்

மலைமேல் ஜொலித்திடும்
மாநகர் போலவே
மண்ணகம் காணவே
ஒளியினை வீசுவோம்
ஆண்டவர் இயேசுவின்
உறவினில் நெருங்கிட
அணையாத ஜோதியாய்
சுடரை வீசுவோம்

இருளை நீக்கிட
ஒளியாய் வந்தவர்
அருள் நிறை ஒளியினை
மேதினில் வீசுவோம்
வார்த்தையைப் பிடித்துமே
சுடர்களைப் போலவே
எழும்பிப் பாரினில்
சுடரை வீசுவோம்

அழிவின் பாதையில்
கல்லறை சென்றிடும்
ஆயிரம் ஆயிரம்
தரிசனம் காணுவோம்
சுவிசேஷ ஒளியினை
யாவரும் கண்டிட
துணிந்து என்றென்றுமாய்
சேவையைச் செய்குவோம்

Onrumillamalae Ninra Ennai ஒன்றுமில்லாமலே நின்ற என்னை

 ஒன்றுமில்லாமலே நின்ற என்னை

கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் – ஆ…ஆ…
நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு

இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் – ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்

போன நாட்கள் தந்த வேதனைகள்
உம் அன்பு தான் என்று அறியவில்லையே
உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவே
புடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர்

தெய்வ அன்பு என்ன உன்னதம்
இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் – ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்

ஆழ்மனத்தின் துக்கப்பாரமெல்லாம்
உம் தோளில் ஏற்றதை உணரவில்லையே
(தன்னந்தனிமையிலே, மனமொடிந்து போகையிலே
உம் ஜீவனைக் கொடுத்து ரட்சித்தீரே

தேவன் தானே என் அடைக்கலம்
ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் – ஆ…ஆ…
நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு

இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் – ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்.

Oru Kutram Kooda Seiyaadha ஒரு குற்றம் கூட செய்யாத

 ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு தெய்வம்

இயேசு மட்டும் தான் இயேசு மட்டும் தான்
தன் எதிரிகளுக்காய் உயிரை கொடுத்த ஒரே ஒரு தெய்வம்இயேசு மட்டும் தான் இயேசு மட்டும் தான்
ஒரு குற்றம் கூட … ஒரு குற்றம் கூட
ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு தெய்வம்இயேசு மட்டும் தான் இயேசு மட்டும் தான்தன் எதிரிகளுக்காய் உயிரை கொடுத்த ஒரே ஒரு தெய்வம்இயேசு மட்டும் தான் இயேசு மட்டும் தான்இயேசு மட்டும் தான் நம் இயேசு மட்டும் தான்இயேசு மட்டும் தான் நம் இயேசு மட்டும் தான்
எங்கும் நிறைந்த எல்லாம் அறிந்த எல்லாம் வல்ல தெய்வம்உலகத்தைப் படைத்தவர் வணக்கத்துக்குரியவர் ஒரே ஒரு தெய்வம்பச்சத்தண்ணிய பழரசமாக்கி பரவசப்படுத்திய தெய்வம்மேல் ஜாதி கீழ் ஜாதி வித்தியாசம் பாக்காத ஒரே ஒரு தெய்வம்ஒரு குற்றம் கூட …  ஒரு குற்றம் கூட
பாவம் இல்லாத மனிதரின் இதயத்தில் வாழும் சுத்த தெய்வம்பாவத்தை மன்னிக்கும் அதிகாரமுடைய ஒரே ஒரு தெய்வம்இலவசமாக நோயை போக்கிப் பேயை ஓட்டும் தெய்வம்கொதித்தெழுந்த கடலைக்கூட அடக்கி நிறுத்திய தெய்வம்ஒரு குற்றம் கூட … ஒரு குற்றம் கூட…
செத்துப் போன உடலுக்குள்ளே உயிரை வைத்த தெய்வம்ஆதரவில்லா அனாதைகட்கு அடைக்கலமான தெய்வம்கடலின் மீது தரையைப்போல நடந்த அதிசய தெய்வம்பூட்டப்பட்ட வீட்டுக்குளே கடந்து வந்த தெய்வம்ஒரு குற்றம் கூட … ஒரு குற்றம் கூட …
சிலுவையில் தன்னை அறைந்தவரைக்கூட மன்னித்த பெரிய தெய்வம்மரித்த பின்பும் உயிரோடு எழுந்த ஒரே ஒரு தெய்வம்முப்பத்துமூன்று கோடிகளுக்குள்ளே இப்படி இல்லை ஒரு தெய்வம்கையெடுத்து கும்பிடுவதற்கு பாத்திரமான தெய்வம்ஒரு குற்றம் கூட … ஒரு குற்றம் கூட …