புவியாள வந்தவரே
பாவ நாசம் நீக்கிடவே
இருள் யாவையுமே அகற்றி நீங்கவே
புதுவாழ்வு அளித்திட வந்தவரே
ஆயர் குடிலை தேடி வந்தோர்
அவனியை தீர்க்கும் பாலகன் இவரே
அதிசயம் செய்யும் தெய்வம் இவரே
அவனியிலுள்ளோரே வணங்கிடுவோம்
வேதம் கூறும் ஜோதி விளக்காய்
தன்னொளி வீசிட பூவினில் பிறந்தார்
இழந்ததை நாடி தேடி வந்தோர்
அற்புத பாலனைத் தொழுதிடுவோம்
மாளிகையில்லை மஞ்சமில்லை
ஏழைத் தொழுவில் இறைமகன் உதித்தார்
முன்னனை பாலகன் மேசியா இவரே
வல்லப் பிதாவை பணிந்திடுவோம்
No comments:
Post a Comment