Monday, April 21, 2025

Paar Potrum Venthan பார்போற்றும் வேந்தன்

 பார்போற்றும் வேந்தன் பாரினில் வந்து

பாலகனாக பிறந்தாரே

பிறந்தாரே இயேசு பிறந்தாரே
என்னை மீட்டிட வந்தாரே
பாரினில் பாலகனாய்
விண்ணில் மன்னவன்தான்
பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே

மாட்டுத் தொழுவத்தில் மந்தைகள் மத்தியில்
ஏழைக்கோலமாய் பிறந்தாரே
பாவியாம் என்னையுமே பரலோகம் சேர்த்திடவே
வந்தார் மரித்தார் உயிர்த்தாரே

தூதர்கள் துதிபாட சாஸ்திரிகள் தொழுதிட
எளியோனாய் எனக்காக வந்தாரே
மன்னாதி மன்னவனாய் மறுபடியும் வருவாரே
வருவார் இறைவாழ்வு தருவாரே

No comments:

Post a Comment