சூரியன் உதித்தது காரிருள் மறைந்தது
புதிய நம்பிக்கை உலகில் தோன்றினது
கல்லறை திறந்தது மரணம் தோற்றுப்போனது
யூத ராஜ சிங்கம் வெற்றி சிறந்தாரே
இவரே உலகின் இரெட்சகர்
பாடுவோம் கொண்டாடுவோம்
வெற்றி சிறந்தாரே
மனிதனாக வந்த தேவனே
வாழ்கவே வாழ்கவே எங்கள் தேவனே
கல்லறையில் இயேசுவை காணவில்லையே
கவலையுற்ற மரியாளை இயேசு கண்டாரே
மரித்தேன் ஆனாலும் சதா காலமும்
உயிரோடு இருக்கிறேன் என்று சொன்னாரே
மரணத்தை வென்ற தேய்வமே
ஆற்றுவார் மாற்றுவார் எங்கள் காயத்தை
மகிமையாய் மீண்டும் வருவாரே
வாழ்கவே வாழ்க எங்கள் தேவனே
ஆதி அந்தம் ஆனவர் நீர் ஒருவரே
உலகம் தோன்றும் முன்னமே
இருந்த வார்த்தையே
துதியும் கனமும் மகிமையும்
வல்லமையயும் சிரசில் கிரிடமாக
அணிந்த ராஜ ராஜனே
அவரில் மரித்த மனிதர் யாவரும்
அவரோடு எழுவாரே ஆழுகை செய்வாரே
இன்றும் என்றும் ஆழும் தெய்வமே
வாழ்கவே வாழ்க எங்கள் தெய்வமே
No comments:
Post a Comment